எச்சில் இலைகளை உண்ண
எதிர்பார்ப்புடன்
காத்திருந்த காளைகளுக்கு
அதே வடிவில்
வெளியே வீசியெறியப்பட்ட
பச்சைக் காகித இலைகளால்
ஏமாற்றம்.
பாவம்.. அன்று முதல்
காகிதம் தின்னும்
கழுதைகளாயின
அக்காளைகள்
உரச்சாக்கு சுற்றப்பட்ட
குலைவாழைகள்
விழா முடிந்தபின் குப்பைத் தொட்டியில்..
உரச்சாக்கை உரிக்கத் தெரியாமல்
சுற்றி வருகின்றன அக்காளைகள்.

அப்போது
கழுதையானகாளை
இப்போது
என்னவாக மாறப்போகிறதோ
தெரியவில்லை…