முகம்

               



என் முகந்தனிலே
முழுசாய் பல முகத்திரைகள்
சொந்த முகந்தனைச்
சொக்கப்பனைக்
கொளுத்தி விட்டுப்
போலி முகங்களைப்
போர்த்தித் திரிகிறேன்
எவரெவர் முகமோ
என் முகமாய் ஆனது
என் முகமோ
எங்கோ போனது.

             முனைவர்.ச.மகாதேவன்


-மனம்-

                        

ஊதுபத்தியாக நீ 
ஊருக்கு உழைத்தால்
மரணித்த பின்னும்
மணத்தோடு
இருப்பாய்