மீன்



கரையேறும் வரைக்
கடிபடத்தான் வேண்டும் .
அழுக்குகளுக்காக அலையும்
மீன்களிடம் .


சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி



அந்த நீர்க் குமிழிக்குக் தெரியும்
நீண்ட வாழ்க்கையில்லை என .
ஆனாலும்
நடுங்காத நம்பிக்கையுடன்
நாலு வினாடிகள் .

சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி



குத்திக் கிழிக்கிற குளிர் நிசியில்
கைகளைக் கக்கத்தில் நுழைத்து
சுய சூடு பெறுகிற சுபராய தாத்தா போல்
சுய சூட்டில்தான் யாவரும்
குளிர்காய வேண்டி இருக்கிறது
இதில் அக்கினிக் குஞ்சை
எங்கே அடை காப்பது ?

சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி




நெஞ்சும் பஞ்சும் கனக்கத்தான் செய்கிறது ஈரமாய் இருக்கும் வரை .
சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி 



பனவிடலிச் சத்திரத்தில்
 பூ விற்பவன்
பூ மூட்டையைப்
பேருந்தில் ஏற்றுகிறான் .
மணத்தை
 மரத்தடியில் விட்டு


சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி