வெள்ளையடிப்பு நாட்களில்
ஒட்டடைக் குச்சியால்
 நூலம்படையைச் சுத்தம்
செய்தபோது நாலாபுறமும்
சிதறி ஓடிய சிலந்திகளைப்
பார்க்கும் போதெல்லாம்
மே மாதத்து
மாற்றல் உத்தரவு கண்டு
மூட்டை முடிச்சுகளுடன்
மைசூருக்கும்  நாகாலாந்துக்கும்
ஓடும் பக்கத்து வீட்டு லில்லி அப்பா
காரணமின்றி நினைவுக்கு வருகிறார்