குத்திக் கிழிக்கிற குளிர் நிசியில்
கைகளைக் கக்கத்தில் நுழைத்து
சுய சூடு பெறுகிற சுபராய தாத்தா போல்
சுய சூட்டில்தான் யாவரும்
குளிர்காய வேண்டி இருக்கிறது
இதில் அக்கினிக் குஞ்சை
எங்கே அடை காப்பது ?

சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி