இருட்டறைகள் எனக்கு இதமானவை ஒப்பனைகள் ஏதுமின்றி கற்பனைகள் அவசியமின்றி இருப்பறிய முடியா
 இருட்டறைக்குள் கழிகின்றன
என் பொழுதுகள் .
என் அசைவுகளை
 உன் இசைவின்றி நானே
இங்கு தீர்மானிக்கிறேன் .
சாளரங்கள் அற்ற இவ்வறையில் என் பெருமூச்சைக் கூட உன்னால் கேட்க  முடியாது .
பூனைக்குப் பயந்த எலியாய்
புறந்தள்ளி இருக்கும் என்னை
உன் வரவால் வாசலுக்கு இழுத்துவிடாதே
இருட்டறைகள் எனக்கு இதமானவை