Dr.S.MAHADEVAN KULANTHAI KAVITHAI mahaezhuthu.blogspot.com
Wednesday, December 19, 2012
comments (0)
Friday, June 29, 2012
comments (0)
தனித்த மனம்
பக்கத்து நாட்டுக்குக்
கூண்டோடு பெயாந்து போய்விட்ட
என் மகன் குறித்தோ
பக்கத்துத் தெருவிலிருந்த போதும்
பாக்க்க் கூட வராத
என் மகள் குறித்தோ
இப்போது வருத்தமேதுமில்லை.
வேளா வேளைக்கு வரும்
என்ஜியோ காலனி எடுப்புச்
சாப்பாட்டுக் காரனும்
மாலையில் கூடிப் பேசும்
ராமா கோவில் நண்பா குழாமுமே
பின்னாளில் சாசுவதம் என்று
தொந்திருந்தால்
திருமண நாளன்று
திருப்பதி போயிருப்பேன்.
முனைவர்.ச.மகாதேவன்
திறந்தே இருக்கிறோம்
திறந்தே இருக்கிறோம்
என் ரணங்களை நான்
கட்டுப் போடாத்தால்
நாவினால் சுட்ட வடுக்கள்
நாலைந்தை நீங்களும்
கண் கூடாய் பாக்கலாம்.
வலியறியும் விரல்களை
வருடிக் கொடுக்கிற விரல்களை
எதா பாத்து நாங்கள்
தினமும் திறந்தே இருக்கிறோம்.
மனதும் மனித நேயமும்
இருந்தால்
என் ரணங்கள் உங்களால்
குணமாகலாம்.
முனைவர்.ச.மகாதேவன்
Monday, June 4, 2012
comments (0)
உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தின ஜீன் 5 விழிப்புணர்வுக் கவிதை
அதுவரை ஓய்வில்லை…
யாரப்பா அது!
உலகப்பந்தை உயிரோடு புதைப்பது?
தவலைப் பானையில் வெந்நீர் போட்டது மாதிரி
கவலைப் பானையில் கண்ணீரை நிரப்பியது யார்?
துருவப் பகுதிகளில் பனிப்பாறைகள் உருகினால்
தூத்துக்குடிக் கடல், பாளை வரை பரவுமப்பா!
பதை பதைக்கவில்லையா நெஞ்சம்?
அன்று ஓசிக்காற்றை ஒய்யாரமாகச் சுவாசித்தவன்
இன்று ஏசிக்காற்றுக்கு ஏங்குவது ஏனப்பா?
வெப்பத்தை உருட்டிக் கக்கத்தில் வைத்துக் கொண்டது போல்
துக்கத்தில் துடிக்கிறதப்பா தூய பூமி!
வெட்கத்தை விட்டுச்சொல்...
உனக்கும் இதில் பங்கில்லையா?
எருமைக்குரல் ஒலியெழுப்பிகளை மாட்டியபடி - சாலைகளில்இருசக்கர ஊர்திகளில் நீ பறக்கும் போது
மருத்துவமனைகளின் மண்டையோட்டை நீ உடைக்கவில்லையா?
கொசு மருந்து வண்டிகளைப் போல
கரும்புகைக் கக்கிப்போகும் உன் வாகனங்களால்
பயணச்சாலைகள் சுடுகாடுகளாய் மாறிவிடவில்லையா?
ஓசோன் குடைகளில் ஓடிப்போய் ஓட்டை போட்டவனே!
உன் தோலெல்லாம் தொழுநோய் வரச்சம்மதமா?
வயல்களை உழுது உரத்தால் நிரப்பினாய்!
காய்கனிகளை எல்லாம் வேதியியல் கிடங்காய் மாற்றினாய்!
கழிவுத் தொட்டியாய் தாமிரபரணியை மாற்றினாய்!
பிளாஸ்டிக் அழிவுகளால் உலகத்தைத்தாக்கினாய்!
குருதி முதல் சாம்பார் வரை பாலிதீன் பைகளில் தேக்கினாய்!
இயற்கையே சுகமென்றிருந்தவனின் இதயத்தைத் தாக்கினாய்!
நுரையீரலோடு தப்பாமல் தண்ணீர்ப் பாட்டிலையும் தூக்கித் திரிபவனே! –
இனி
உயிர்க்காற்றுக்கு உரிய உத்திரவாதம் இல்லாததால்
வாயு உருளைகளை வயிற்றில் கட்டிக்கொண்டு திரியப் போகிறாயா?
மரங்களின் மரணத்திற்கு மனுப்போட்டு விட்டுத்தானே
நான்கு வழிச் சாலைகள் அமைக்க நாள் செய்தாய்!
விழிப்புணர்வுக் கவிதை
அதுவரை ஓய்வில்லை…
திருச்செந்தூர்ச் சாலையில் வானுயர்ந்து இருந்த
மருதமரங்களின் இடத்தில் இப்போது சிக்னல்
மரங்கள் சிக்கலாய் சிரிக்கின்றனவே!
உன் மின்சார ரம்பங்கள் படாமல்
மிச்சசமிருப்பது கோயில் கொடி மரங்கள் மட்டும்தானா?
குளங்களைக் குறிவைத்தாய் – பாவம்
அவற்றில் பேருந்துகள் நிற்கின்றன.
நதிகளைக் குறி வைத்தாய்
அவற்றைப் பொக்லைன்கள் தின்கின்றன.
இயந்திரங்களோடு நீ எங்கே சென்றாலும்
இடரென்னவோ இயற்கைக்குத்தான் எப்போதும்!
ஜீன் – 5
v இது கொண்டாடப்பட வேண்டிய தினமன்று
கழிவுகளின் அழிவுகளைக் கண்டு நாம்
மாற வேண்டிய தினம்
v இனி ஒரு விதி செய்வோம்...
தனி ஒரு வழி செய்வோம்...
இற்றுப் போகும் சுற்றுச்சூழலைப்
பற்றிப் பாதுகாப்போம்
அதுவரை ஓய்வில்லை.
- முனைவர். ச. மகாதேவன்
Wednesday, May 9, 2012
comments (0)
Monday, April 16, 2012
comments (0)
பியூசான குழல் விளக்கிற்கு
ஒருபடி உப்புத் தந்து
சைக்கிளில் உப்பு வியாபாரம்
செய்துவந்த சந்தைப் பேட்டை
ராசையாவின் பிழைப்பிலும்
பன்னாட்டு உப்பு நிறுவனங்களின்
அயோடின் அலறல் அறிக்கை
மண்ணை அள்ளிப் போட்டது
கீரை விற்கவாவது போகலாமென்று
போனால்
பேரங்காடிகள் அவன் பிழைப்பில்
மண்ணள்ளிப் போட்டான.
பேரங்காடிக் சுவர்களில்
கணினி விலைக் குறியீட்டுடன்தான்
இனி
கீரைகள் விற்கப்பட வேண்டுமாம்.
இவர்கள் புகாத
தொழில் இருந்தால்
சொல்லுங்கள்
அவன்
பட்டினியில் சாவதற்குள்
- முனைவர். ச. மகாதேவன் www.mahatamil.com
Thursday, February 23, 2012
comments (0)
Sunday, February 5, 2012
comments (0)
எங்கள் கவிதையை வெளியிட்ட
ஆனந்த விகடனுக்கு மகா பாரதி
நன்றியை தெரிவித்துக்கொள்கிறது
எலிகளானோம் நாம்(பக்கம் எண் 20)
உன் உயிர் பிரியும் இறுதிநாளுக்கு
முந்தைய நாள் வரை நீ சகஜமாகத்தானிருந்தாய்
மரணத்தின் விடியல் என்றறியாமல் துயிலெழுந்து
பல் துலக்கிப் பலகாரம் உண்டு
பாளை பஸ்நிலையம் ஓடி
பேருந்து பிடித்துப் பதறிப் பணி செய்து
வண்ணாரப்பேட்டை பேராச்சி அம்மனைத் தரிசித்து
மகனைப் பற்றிக் கவலைப்பட்டு
மகளறியாமல் அவள் செல்பேசிய எண் பார்த்து
ஆயாசத்தோடு படுக்கப் போகும் வரை
நீ அறியாத உன் மரணம்
உன் காலுக்குக்கீழே தான் பரவிக்கொண்டிருந்தது
வாளியிலிருந்து சிந்திய தண்ணீர்
தரையில் பரவுவதைப் போல்
அடுக்களை இருட்டிலிருக்கும்
பூனையைக் கவனிக்காமல்
அதன் எதிரில் உலவும் எலிகளானோம் நாம்
பனை இணை
பரியா மருதபட்டிப் பனைதேரியில்
நொங்கு நோண்டித் தின்ற
பெருவிரலின் நகக்கணுவில் இன்னும்
ஈரம் மிச்சமிருக்கிறது
அப்புறம் ஓட்டிய நொங்கு வண்டியின்
பளபளப்பு கண்களின் ஓரம் இன்னும்
மிச்சமிருக்கிறது.
விடுமுறைக்குப் போன புதுப்பட்டிப்பாட்டி
வீட்டுப் பனையோலைக் குடிசை
இன்றும் வாழநினைக்கும் வசந்தசொர்க்கம்
வாசக் குளிர்ச்சியால் மனதை வருடிய
பனையோலை விசிறிக் காற்று
தொட்டிலைச் சுமந்த உத்திரம்
நிலத்தைப் பதிந்துவைத்த பனையோலைப் பத்திரம்
யாவும் பனைதான்
யாவும் பனைதான்
என்றும் நம் மானுடத்தின்
இன்பியல் இணைதான்