தனித்த மனம்

பச்சை அட்டை வாங்கிப்
பக்கத்து நாட்டுக்குக்
கூண்டோடு பெயாந்து போய்விட்ட
என் மகன் குறித்தோ

பக்கத்துத்
தெருவிலிருந்த போதும்
பாக்க்க் கூட வராத
என் மகள் குறித்தோ
இப்போது வருத்தமேதுமில்லை.

வேளா
வேளைக்கு வரும்
என்ஜியோ காலனி எடுப்புச்
சாப்பாட்டுக் காரனும்
மாலையில் கூடிப் பேசும்
ராமா கோவில் நண்பா குழாமுமே
பின்னாளில் சாசுவதம் என்று
தொந்திருந்தால்
திருமண நாளன்று
திருப்பதி போயிருப்பேன்.
                                           முனைவர்.ச.மகாதேவன்