மரணித்த மரம்


முள் மரங்களை அரைத்துக்

காகிதம் செய்துவிட முடிகிறது.

கல் மரங்களைக் காட்சிப்படுத்திக்

காசு சம்பாதித்துவிட முடிகிறது.

சொல் மரங்களை அடுக்கி

ஆட்சியைப் பிடித்து விட முடிகிறது

இருக்கிற இரண்டொரு

மரங்களையும் இழந்து.

                                           முனைவர்.ச.மகாதேவன்