திறந்தே இருக்கிறோம்

என் காயங்களும் நானும்
திறந்தே இருக்கிறோம்
என்  ரணங்களை நான்
கட்டுப் போடாத்தால்
நாவினால் சுட்ட வடுக்கள்
நாலைந்தை நீங்களும்
கண் கூடாய் பாக்கலாம்.
வலியறியும் விரல்களை
வருடிக் கொடுக்கிற விரல்களை
எதா பாத்து நாங்கள்
தினமும் திறந்தே இருக்கிறோம்.
மனதும் மனித நேயமும்
இருந்தால்
என் ரணங்கள் உங்களால்
குணமாகலாம்.
                                        முனைவர்.ச.மகாதேவன்