செம்புலமெல்லாம்
செங்கற் சூளையாயிற்று

பெயல் நீரையெல்லாம்
புட்டியிலடைத்து
விற்றாயிற்று

இதில் இனி…
அன்புடை நெஞ்சமாவது
உறவு கலப்பதாவது!
ஒழுங்கு மரியாதையாக
ஜதாகக்காரன்
பேச்சைக் கேட்டு
அப்பா பார்த்த பெண்ணைக்
கட்டியழு காலம் முழுக்க