ஈரமாயிருக்கிர வரை
ஒட்டத்தான் செய்கிறது
பாதங்களை வருடத்தான் செய்கிறது
அலையும் மலையும்.

இறங்கத் தயாராகிச்
சிறகுகள் விரிக்கும் வரை
மேல் பரப்பில் லேசாகவே பறக்கிறது
விமானமும் தன் மானமும்

ரசிக்கும் உள்ளம் இருக்கிறவரை
அழகாகவே சிரிக்கிறது
படித்த பள்ளியும்
சப்பாத்திக் கள்ளியும்.

இருக்கிற வரைக்கும்
வெறுப்பை மறுக்கும்
இனிய ரசனை யிருந்தால்
எதுவும் சிறக்கும்
மனம் மகிழ்ச்சியில் பறக்கும்.