ருத்ர மூர்த்தி 
ரவுத்திரம்  கண்களில் கொப்பளிக்க
அவனும்  அவளும் கலந்த
சங்கம தேகத்தோடு
அம்பலத்திலாடுகிறான் சிவன் 
அவனது உடுக்கை  ஒலியில்
அண்டங்கள் பொடிபடுகின்றன
அவனது பாத  பங்கயங்களில்
பந்தாடப்படுகின்றன நவகோள்களும் 
அவனருகில் ஒலிக்கும் பிரணவப்பேரொலி
செவிப்பறைகளில்  ரீங்காரமிடுகிறது
பஞ்ச சபைகளும் பதறுகின்றனஅவனது
ஆட்டமும்  ஓட்டமும் தாங்காமல் 
இனித்தமுடைய அவன் பொற்பாதங்களில்
உருண்டது  ருத்ர பூமி அங்குமிங்கும்
      அப்பொது
குழந்தை அழுகுரல் அவனை
நிலைகுலைய வைத்தது
உலகெலாம்  உணர்ந்து ஓதற்கரியவன்
திகைத்தான்  ஒரு வினாடி 
அப்போதே ஈசன்தாய்ப்பாச
நேசனாய் தனத்தோடு மாறினான்
சக்தியும் உள்ளாளே சரிபாதியாய் 
இன்னொரு சம்பந்தன்
இருக்கலாமல்லவா  என்றாள்
அகிலாண்ட  நாயகி
                                  - முனைவர். ச. மகாதேவன்  www.mahatamil.com