வெள்ளையடிப்பு நாட்களில் ஒட்டடைக் குச்சியால்
 நூலம்படையைச் சுத்தம்
செய்தபோது நாலாபுறமும் சிதறி ஓடிய சிலந்திகளைப் பார்க்கும் போதெல்லாம் மே மாதத்து  மாற்றல் உத்தரவு கண்டு  மூட்டை முடிச்சுகளுடன் மைசூருக்கும்  நாகாலாந்துக்கும் ஓடும் பக்கத்து வீட்டு லில்லி அப்பா காரணமின்றி நினைவுக்கு வருகிறார்