எழுதாத பேனாக்களையும்
எடுத்தெடுத்து வைத்திருப்பார் 
அப்பா
தொலைபேசி எண் குறிக்கவோ
அவசரமாக ஏதோ எழுதவோ
எடுத்து எழுதினால்
மையற்று  
எழுத்தின் தடம்
மட்டும் தெரியும் .
ஆனாலும் அவற்றைத் தூரப் போட 
அப்பாவுக்கு மனசுவராது
சில நேரங்களில் தேய்ந்துபோன
குட்டைப் பென்சிலைக் கூட
அவர் மாட்டி எழுதிப் பார்த்திருக்கிறேன் .
அது சரி
அடுக்கடுக்கடுக்காய்
 ஆயிரம் பேனாக்களை
வைத்திருக்கும்
பேனாக் கடைக்காரன்
என்ன எழுதுவான் தன் கடைப் பெயரைத்
தவி

சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி