என் தாயின்
சின்ன வயிற்றுக்குள்ளும்
சிரமமில்லாமல்தான்
இருந்தேன் .
இன்றோ எதற்கும்
விசாலம் தேடி
விரைகிறேன் .

ஒடுக்கமும்
விரிவும்
உள்ளுக்குள்
உள்ளது
என்பதை
 அறியாமல் ,

சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி