. மொட்டை மாடிக் கவளச் சோறு
வேனிற்கால மண்பானை நீர்
முருகன் தியேட்டர் கல் முறுக்கு
ஆனித்தேர் வடம்
பதினெட்டாம் பெருக்கு நதி
தசரா காளி வேடம்
ஜீவ ஜோதி மிட்டாய்
வாழைப் பழம் போட்டு
அடித்துத் தந்த பாக்கெட் ஐஸ்
கை விட்டுப் பரந்த
 சி .பி .வாடகை சைக்கிள்
கலர்க் கோழிக் குஞ்சு
இப்படிப்பட்ட பட்டியலில்
 இன்னமும் உண்டு சொல்லாத பலவும்
இறுகிய கான்க்ரீட்டாய்
இதயம் மாறிய பின்
இளக்கம் பற்றி
என்ன கவிதை வேண்டிஇருக்கிறது ?


சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி