திற... பற....


ஒரு பறவையின் பரந்துபட்ட
ஆகாயத்தைப் போல
அகன்று பரந்திருக்கிறது
இந்த ஆச்சர்யமான வாழ்க்கை

ஒரு மீனின் நீந்துதலுக்காய்
காத்திருக்கும்
பரந்த ஆழியைப்போல்
பரந்து கிடக்கிறது இப் பாசவாழ்க்கை

பறக்கவும் நீந்தவும் நேரமற்று
முட்டைக்குள் முடங்கிக் கிடக்கின்றன
இம்மனிதக் குஞ்சுகள்

அகலக் கதவுகளை
அகன்று திறந்துக் காத்திருக்கும்
அழகான வாழ்க்கை முன்
நம்மையே நாம் மூடிக்கொள்கிறோம்
நாகரீகம் ஏதுமற்று

                                             - முனைவர். ச. மகாதேவன்  www.mahatamil.com