உயிர்த்துவம்


பின்னிரவின் பிசுபிசுத்த நிசப்தத்தைக்
கலைத்தபடி 'கிரிச்' சென்று கடந்து செல்கின்றன
சக்கரம் பொருத்திய மருத்துவமனை ஸ்ட்ரச்சர்கள்
பச்சைநிறப் போர்வைக்குள்ளிருந்து
தலைநீட்டிப் பார்க்கிறேன்.
பதின்மூன்றுநாள் ஊழலுக்கெதிராக
உண்ணா நோன்பிருந்த அம் ' மாமனிதரை '
நகர்த்திக் கொண்டு அவசர சிகிச்சைப்பிரிவு
நோக்கி ஓடினார்கள்.
கருணை மனு நிராகரிக்கப்பட்ட
மூவருக்காக எரிந்து சாம்பலான தீயாக தீபம்
செங்கொடியின் உடலைக்
கதறலோடு அள்ளிக் கொண்டு ஓடினார்கள்
            சக மனிதர்களுக்காகச்
சாகவும் துணிகிற
‘மகா ஆத்மாக்கள்’
உடனிருக்கிறவரை
உரக்கப்பேசித் தலைகோதி
அன்பு செலுத்திக்கொண்டேயிருக்கிறது
உயர்ந்து கொண்டிருக்கும் உயிர்த்துவம்
                                                       - முனைவர். ச. மகாதேவன்