நாவுக்கருகே எந்திரம்

பித்தளை காபி
வட்டகைகளைக்
காகிதக்குவளைகள்
பதிலீடு செய்தன

பொத்தானை அழுத்தினால்
அளவாக நிரம்பும்
தேநீரும் குளம்பியும்
கசாயச் சுவையை விடக்
கொடுமையாயிருக்கிறது


தயவு செய்து
நாவுகளுக்கருகில்
மட்டுமாவது
இயந்திரங்கள்
வராமல் தடையுத்தரவு
வாங்குங்களேன்.
    - முனைவர். ச. மகாதேவன்