கவலை


                                            
 ஆயுதத்தோடு ஆசி தந்த
ஆயிரத்தா முதல்
விடிகாலைப் பேட்டையிலிருந்து
வந்த பேராச்சி வரை
விழித்திருந்து பதின்முன்று
தசரா சப்பரங்களைக்
கண்குளிரத் தரிசித்தாகி விட்டது
இப்போது
எனக்கிருக்கும்
ஒரே கவலை
நெற்றியில் பூசியதிருநீறு போக
மிச்சமிருப்பதை
என்ன செய்வது என்பது தான்!!!!
                         
                                                              முனைவர்  ச. மகாதேவன்