சிதலமான சின்ன விரல்கள்



வேனிற்கால வெப்பப் பொழுதுகளில்
இலைகளை இழந்துவிட்டு
மொட்டையாய் முனகுகிற
மரங்களைப் பார்க்கும் போதெல்லாம்
மாரடைப்பு வருகிறது
உங்களின்
சின்ன விரல்களைச்
சிதலமாக்கிய
காலன் யார்?
கேள்வி
எதிரே பார்த்ததும்
ஏனிந்தக் கேள்வி?
இவரைப் பார்த்தால்
இதனைக் கேட்போமென
எவரைப் பார்த்தாலும்
அதே கேள்விகள்!
அச்சிட்ட விண்ணப்பப் படிவம் மாதிரி
அலுக்காத அதே கேள்விகள்
”நல்லா இருக்கீங்களா?”
கேட்க வேண்டுமே
என்பதற்காகக் கேட்டானேயொழிய
உள்ளமொன்றிக் கேட்கவில்லை
அப்படி நானும் கேட்டிருப்பேனே
ஆறெழு சமயங்களில்.....

                        முனைவர்.ச.மகாதேவன்