மரத்த மனம்




பொன்னமராவதி
பெருநாவலர்
மரக்கடைக்கருகில்
சவ ஊர்வலம் நடந்தபோது
பார்க்கப் பயந்துபோய்
திரும்பிய விநாடிகள்

சாலை முழுக்க

ஊர்வலம் போன
சுவடுகளின் சாட்சியாய்
மஞ்சள்

  மரண மலர்கள்!

 

இப்போது
குழந்தை கொல்லப்பட்ட
கொலைக் காட்சியைத்
தொலைக்காட்சியில்
பார்த்தாலும்
பாப்கானை அள்ளி
பல்லில் அரைத்துத்தள்ள முடிகிறது.

              
                                           

                         முனைவர் ச. மகாதேவன்