ரசி



யானை லத்தியை மிதித்தாயென்றல்
காலில் முள்குத்தாதென்றாய்
மிதித்தேன்.


யானை வால்முடியை வளைத்துக்
கைக்காப்புபோட்டால்
சீர்தட்டாதென்றாய

 போட்டேன்.


 வீட்டுவாசலில் ஆசிதர வந்துநிற்கிற
 யானை முன்
 வாளி நீரோடு போய்
அள்ளித் தெளித்துக் கொண்டால்
முகம் தெளிச்சியாயிருக்குமென்றாய்
செய்தேன்.

ஒரு ருபாய் தந்தால் காஜமுகனின்

ஆசி கிடைக்குமென்றய்
பெற்றேன்.

எப்போதாவது சொன்னாயா

யானை வந்தால்
ரசியென்று.........

                          -Dr.S. மகாதேவன்