பழங்களும் நாங்களும்...
மெழுகிடப்பட்ட ஆஸ்திரேலிய
ஆப்பிள்களைப் போல
மனிதர்களின் தோல்களுக்கும்
நாளை மருந்திடப்படலாம்
மனிதர்கள் வரிசையில் நிறுத்தப்பட்டு
நெற்றியில் இரகசியக் குறியீடுகளுடன்
அடையாள ஸ்டிக்கர்கள் ஒட்டப்படலாம்.
விதையில்லாத் திராட்சைகளைப் போல
மனிதர்களை மாற்ற
விபரீத விஞ்ஞானம் முயலலாம்.
அழுகிய பழங்களை
அள்ளிப் போட்டு அரைத்துப்
பழக் கூழ் தயாரிக்கிறமாதிரி
மனிதர்களை அரைத்து
எலும்புக் கட்டடங்கள்
எழுப்பப்படலாம்.
என்ன செய்தாலென்ன?
எவர் எதிர்த்துக்
கேட்கப் போகிறார்கள்?
- முனைவர். ச. மகாதேவன்
0 comments:
Post a Comment