நடுங்கு கற்கள்

பயணப் பொழுதுகளின்
சன்னலோரக் காட்சிகளில்
இப்போதெல்லாம்
துயரம் மட்டுமே
துண்டு துண்டாய்

நான்கு வழிப் பாதைகளின்
நடைபாதைக் கல்லறைகளாய்
வாடிச் செத்த வயற்காடுகள்

மண்ணைக் கொன்று
அதன் உயிரைத் தின்ற நினைவாய்
நடு நடுவே
புறநானூறு போற்றாத
நடுங்குகற்கள்
 
வாரலை வாரலை
என்பது போல்
மறித்துக் கைகாட்டும்
வண்ணக் கொடிகள்

சன்னலோரம்
அமர்ந்தாலும்இனி
பக்கவாட்டில்
பார்க்காமலிருப்பதைத்தவிர
வேறு வழியில்லை

                                                - முனைவர். ச. மகாதேவன்