அலை

ஆர்ப்பரிக்கும்
அலைகளினூடேயும்
அமைதியாக
சலனமற்று
சம்மணமிட்டுப் பரவிநிற்கும்
நடுக்கடல் மாதிரி
வேகமான வாழ்வுப் பரப்பிற்கு மத்தியில்
மரணம்
மவுனமாய்
மண்டியிட்டு அமர்ந்திருக்கிறது.

             - முனைவர். ச. மகாதேவன்