Friday, June 29, 2012
comments (0)
தனித்த மனம்
பக்கத்து நாட்டுக்குக்
கூண்டோடு பெயாந்து போய்விட்ட
என் மகன் குறித்தோ
பக்கத்துத் தெருவிலிருந்த போதும்
பாக்க்க் கூட வராத
என் மகள் குறித்தோ
இப்போது வருத்தமேதுமில்லை.
வேளா வேளைக்கு வரும்
என்ஜியோ காலனி எடுப்புச்
சாப்பாட்டுக் காரனும்
மாலையில் கூடிப் பேசும்
ராமா கோவில் நண்பா குழாமுமே
பின்னாளில் சாசுவதம் என்று
தொந்திருந்தால்
திருமண நாளன்று
திருப்பதி போயிருப்பேன்.
முனைவர்.ச.மகாதேவன்
திறந்தே இருக்கிறோம்
திறந்தே இருக்கிறோம்
என் ரணங்களை நான்
கட்டுப் போடாத்தால்
நாவினால் சுட்ட வடுக்கள்
நாலைந்தை நீங்களும்
கண் கூடாய் பாக்கலாம்.
வலியறியும் விரல்களை
வருடிக் கொடுக்கிற விரல்களை
எதா பாத்து நாங்கள்
தினமும் திறந்தே இருக்கிறோம்.
மனதும் மனித நேயமும்
இருந்தால்
என் ரணங்கள் உங்களால்
குணமாகலாம்.
முனைவர்.ச.மகாதேவன்