மீனும் …. மீனாவும்


 அலங்கார மீன்களுக்கிங்கே
அடைக்கலம் வீடுகள்தோறும்
செவ்வகக் கண்ணாடிச் சுவர்களை
முட்டி முட்டி அங்குமிங்கும் அலைகின்றன
தங்கமென மின்னும் அலங்கார மீன்கள்.

ஆற்றுமீன்கள் வறுபடுவதென்னவோ
அடுக்களை வாணலியில்…
பாவம்…
         அதிலும் அவஸ்தை
அழகற்றவைகளுக்குத் தான்

மீனாகப் பிறந்தாலும்
மீனாவாகப் பிறந்தாலும்
அழகாயிருத்தல்
                                          அவசியம் போலிருக்கிறது.

                                                                 - முனைவர். ச. மகாதேவன்