விகடன் வார இதழில் இடம்பெற்ற எமது கல்லுரி முத்துக்களுக்கு மகா பாரதியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்



முகம்

               



என் முகந்தனிலே
முழுசாய் பல முகத்திரைகள்
சொந்த முகந்தனைச்
சொக்கப்பனைக்
கொளுத்தி விட்டுப்
போலி முகங்களைப்
போர்த்தித் திரிகிறேன்
எவரெவர் முகமோ
என் முகமாய் ஆனது
என் முகமோ
எங்கோ போனது.

             முனைவர்.ச.மகாதேவன்


-மனம்-

                        

ஊதுபத்தியாக நீ 
ஊருக்கு உழைத்தால்
மரணித்த பின்னும்
மணத்தோடு
இருப்பாய்


               

எதிர் இணைகள்

தாஜ் மகாலுக்கு முன்னரும்
தட்டேந்திய சிறுமிகள்
அதிசயங்களும்
அவலங்களும்
அருகருகே
அழுக்கை அழிக்கும் ரப்பர்
அழுக்காயிருப்பதைப் போல....
             
- முனைவர். ச. மகாதேவன்  www.mahatamil.com